முக்தி கிடைக்க: இறைவனை நெய்யால் அபிஷேகம் செய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடைக்க வழி வகுக்கும். தீர்க்காயுசுடன் வாழ: சுத்தமான பசும்பாலினால் அபிஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை நீடிக்க: குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இறைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். நல்வாழ்க்கை அமைய: நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்ய பிரச்னை தலையெடுக்காது உங்கள் வீட்டில். கடன் தீர: மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும். நினைக்கும் காரியம் நிறைவேற: சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய்ய காரிய சித்தி உண்டாகும். பிணிகள் தீர: கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும். குழந்தை பாக்யம் பெற: நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும். பயம் போக்க: மனதில் தோன்றும் இனம் புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். இனிய குரல் வளம் கிடைக்க: இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தால் வாழ்வும் இனிமையாகும். குரலும் தேன் குரலாகும். செல்வம் சேர: பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல் நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும். அதேபோல சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டுவித செல்வங்களையும் அடையலாம். பாவங்கள் கரைய: பஞ்சகவ்யத்தால் அதாவது பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர்த்து அபிஷேகம் செய்ய பாவங்கள் கரைய உதவும்.
1.நன்னீர் - தூய்ப்பிக்கும் 2. நல்லெண்ணை - நலம்தரும் 3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும் 4. மஞ்சள் தூள் - கடன் நிவர்த்தி, நல் நட்பு வாய்ப்பிக்கும் 5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும் 6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி, பாப நிவர்த்தி (பசுவின் பால், தயிர், நீர், சாணம், நெய் கலந்தது) 7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும் 8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும் 9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும் 10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி 11. நெய் - முக்தியளிக்கும் 12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும் 13. இளநீர் - நல் சந்ததியளிக்கும் 14. கரும்பு சாறு - ஆரோக்கியமளிக்கும் 15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும் 16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும் 17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம் 18. திராட்சை - திடசரீரம் அளிக்கும் 19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும் 20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும் 21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி 22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும் 23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை 24. திருநீறு - சகல நன்மையும் தரும் 25. அன்னம் - அரசுரிமை ராஜ்ஜியம் கிட்டும் 26. சந்தனம் - லட்சுமி கடாட்சம், சுகம், பெருமை சேர்க்கும் 27. பன்னீர் - சருமம் காக்கும் 28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும் 29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும். |