சிவராத்திரி விரத பலன்கள்

   'கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற நாள்தான் சிவராத்திரி. வருடம் 365 நாட்களிலும் முறையாக சிவபெருமானை வழிபட இயலாதவர்கள் ஒரு நாளாகவும், திருநாளாகவும் கொண்டாடும் சிவராத்திரி இரவில் விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் யாவும் வீடு வந்து சேரும்.

   இந்த விழிப்பு விரதத்தை மங்களம் தரும் மகா சிவராத்திரி என்றும், செல்வ வளம் பெருக்கும் சிவராத்திரி என்றும், எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி என்றும், காரிய வெற்றி தரும் கனிவான சிவராத்திரி என்றும் மக்களால் வர்ணிக்கப்படுகின்றது. சிவன் பெயரை உச்சரித்து, உச்சரித்து சிறப்புகளைபெற்ற அறுபத்து மூவரைப் போல நீங்களும் மாற வேண்டுமானால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய விரதம் சிவராத்திரி விரதம்.

   வாழ்வில் இருளை அகற்றி ஒளியைக் கொடுக்க நாம் விரதமிருந்து சிவனை வழிபட்டால் அசுவமேத யாகம் செய்ததன் பலன் கிடைக்கும். மகா விஷ்ணு இந்த விரதம் இருந்து தான் சக்கராயுதத்தையும், மகா லட்சுமியையும் பெற்றார் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே, வாழ்வில் செல்வம், வெற்றி பெற விரும்புவோர் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

Divine Talking Clock